பிற்படுத்தப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை 31-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

பிற்படுத்தப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை 31-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அரசு, அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு (3 ஆண்டுகள்) படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எந்த நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழில்படிப்பு உள்ளிட்ட பிற படிப்புகளுக்கு பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்வி உதவித்தொகை கோரும் மாணவ-மாணவிகள் அதற்கான விண்ணப்பங்களை அவரவர் படிக்கும் கல்வி நிறுவனங்களில் வழங்க வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வருகிற 31-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றிய மேலும் விவரங்களுக்கு ஈரோடு கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் சி.கதிரவன் கூறி உள்ளார்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அரசு, அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு (3 ஆண்டுகள்) படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எந்த நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழில்படிப்பு உள்ளிட்ட பிற படிப்புகளுக்கு பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்வி உதவித்தொகை கோரும் மாணவ-மாணவிகள் அதற்கான விண்ணப்பங்களை அவரவர் படிக்கும் கல்வி நிறுவனங்களில் வழங்க வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வருகிற 31-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றிய மேலும் விவரங்களுக்கு ஈரோடு கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் சி.கதிரவன் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story