தென்காசியில் கொரோனாவுக்கு ஒருவர் பலி- நெல்லை, தூத்துக்குடியில் 20 பேருக்கு தொற்று


தென்காசியில் கொரோனாவுக்கு ஒருவர் பலி-  நெல்லை, தூத்துக்குடியில் 20 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 14 Dec 2020 7:00 AM GMT (Updated: 14 Dec 2020 7:00 AM GMT)

தென்காசியில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார். நெல்லை, தூத்துக்குடியில் புதிதாக 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

தென்காசி, 

நெல்லை மாவட்டத்தில் நேற்று மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்து 46 ஆக உயர்ந்தது.

மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 18 பேர் நேற்று குணமடைந்தனர். இதன்மூலம் மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 693 ஆக அதிகரித்தது. தற்போது 143 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இதுவரை 210 பேர் இறந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 56 வயதான ஆண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கடந்த 5-ந்தேதி தென்காசி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

தென்காசி மாவட்டத்தில் நேற்று புதிதாக 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 168 ஆக உயர்ந்தது. இதில் 7 ஆயிரத்து 976 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 36 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 156 பேர் இறந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 14 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 867 ஆக உயர்ந்தது. இதில் 15 ஆயிரத்து 602 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர்.

தற்போது அரசு ஆஸ்பத்திரிகளில் 125 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 140 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்துள்ளனர்.

Next Story