அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு


அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு
x
தினத்தந்தி 24 Jan 2021 3:50 AM GMT (Updated: 24 Jan 2021 3:50 AM GMT)

அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசினார்.

வானூர்,

விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கிளியனூரில் நடைபெற்றது. இதற்கு சக்கரபாணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பக்தவச்சலம் வரவேற்றார். மாவட்ட செயலாளர் அமைச்சர் சி.வி.சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, தேர்தல் பணிகளை மேற்கொள்வது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

இதில் மாவட்ட மகளிரணி செயலாளர் தமிழ்செல்வி, செல்லப்பெருமாள், கிளியனூர் கூட்டுறவு வங்கி தலைவர் பிரபு, தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் கோகுல்ராஜ், பாசறை செயலாளர் சுமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் வானூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் நடைபெற்றது. இதில் மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விக்கிரவாண்டி

இதேபோல் விக்கிரவாண்டியில் நடந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்கு நகர செயலாளர் பூர்ணராவ் தலைமை தாங்கினார். முத்தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழுப்புரம் மாவட்ட செயலாளர் அமைச்சர் சி.வி.சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய செயலாளர் வேலு, மாநில பொதுக்குழு லட்சுமிநாராயணன், மாவட்ட இணை செயலாளர் மலர்விழி, மாவட்ட பேரவை துணைதலைவர் ரமேஷ், நகர பேரவை செயலாளர் பலராமன், நகர துணை செயலாளர் கண்ணன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை செயலாளர் பிரகாஷ், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் ஜாகீர் உசேன், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சங்கர், இளைஞரணி செயலாளர் வாசு, பாசறை செயலாளர் ஈஸ்வரன், தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரபு, நகர தலைவர் விஜயகுமார், நிர்வாகிகள் ராஜேஷ், ராஜா முருகன், கிருஷ்ணன், கலியபெருமாள், ராதாகிருஷ்ணன், அய்யனாரப்பன், செங்கேணி, பூவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story