நெல்லையில் ஓடும் காரில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு


நெல்லையில் ஓடும் காரில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 31 Jan 2021 5:40 AM GMT (Updated: 31 Jan 2021 5:40 AM GMT)

நெல்லையில் நேற்று ஓடும் காரில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை:
நெல்லை டவுனில் இருந்து சந்திப்பை நோக்கி நேற்று இரவு ஒரு கார் வந்து கொண்டிருந்தது. டவுன் ஆர்ச் அருகே வந்்தபோது காரில் திடீரென்று தீப்பிடித்தது. தீ கொளுந்துவிட்டு மளமளவென எரிந்தது. காரில் இருந்தவர்கள் இறங்கி தப்பி ஓடினர். நெல்லையப்பர் கோவில் வெளிதெப்பத்தில் நேற்று இரவு தெப்பத் திருவிழா நடந்தது. இதற்காக அங்கு பாதுகாப்புக்காக பேட்டை தீயணைப்பு வாகனத்துடன் வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்களும் வந்தனர்.  காரில் எப்படி தீ பிடித்தது? என்பது குறித்து நெல்லை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் காரில் திடீரென தீப்பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story