பெரம்பலூரில் 2-வது நாளாக மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 49 பேர் கைது


பெரம்பலூரில் 2-வது நாளாக மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 49 பேர் கைது
x
தினத்தந்தி 4 Feb 2021 1:09 AM GMT (Updated: 4 Feb 2021 1:11 AM GMT)

பெரம்பலூரில் 2-வது நாளாக மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 49 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர், 

பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும். கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழந்த அரசு ஊழியர்களுக்கு ரூ.50 லட்சமும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று 2-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பாலக்கரை ரவுண்டானா அருகே கூடினர். பின்னர் அவர்கள் அரசு ஊழியர் சங்க பெரம்பலூர் மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமையில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மறியல் போராட்டத்தி்ல் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 49 பேரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்து, வேனில் ஏற்றி அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் நேற்று இரவு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story