கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேருக்கு சிகிச்சை


கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேருக்கு சிகிச்சை
x
தினத்தந்தி 8 Feb 2021 5:53 AM GMT (Updated: 8 Feb 2021 5:54 AM GMT)

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,270 ஆக உயர்ந்துள்ளது. அதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 2,243 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 119 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Next Story