உதவித்தொகை உயர்த்தி வழங்ககோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்


உதவித்தொகை உயர்த்தி வழங்ககோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
x
தினத்தந்தி 9 Feb 2021 7:28 PM GMT (Updated: 9 Feb 2021 7:28 PM GMT)

உதவித்தொகை உயர்த்தி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர். மேலும் அவர்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி
உதவித்தொகை உயர்த்தி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர். மேலும் அவர்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடியேறும் போராட்டம்
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு உதவி தொகையை ரூ.3 ஆயிரம் ஆகவும், கடும் ஊனமுற்றோருக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க கோரியும், தனியார் துறை வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகள் சட்டப்படி 5 சதவீத இட ஒது்க்கீடு வழங்க சிறப்பு சட்டத்தை இயற்றவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
போராட்டத்திற்கு மா ற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மணிகண்டம் வட்டார தலைவர் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜெயபால் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் போட்டுக்கொண்டிருந்த மாற்றுத்திறனாளிகள் திடீெரன சாலை மறியல் செய்ய முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 70 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
துறையூர்-திருவெறும்பூர்
இதேபோல் துறையூர் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நடத்திய குடியேறும் போராட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ரவி தலைமை தாங்கினார். இதில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து ெகாண்டனர்.
திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகம்  முன்பு நடந்த போராட்டத்துக்கு திருச்சி புறநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் குமார் தலைமை தாங்கினார். இதில் சங்க மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முசிறி
முசிறி சார்-ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் நடத்திய குடியேறும் போராட்டத்துக்கு சங்க மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் கலந்து கொன்டனர்.

Next Story