ஈரோடு தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்


ஈரோடு தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்
x
தினத்தந்தி 9 Feb 2021 9:13 PM GMT (Updated: 9 Feb 2021 9:13 PM GMT)

ஈரோடு தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் நடத்தினாா்கள்.

ஈரோடு
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். அதிக பாதிப்பு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். தனியார் துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் தாலுகா அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஈரோடு தாலுகா அலுவலகத்துக்கு சங்க மாவட்ட துணைத்தலைவர் ராஜூ தலைமையில் மாற்றுத்திறனாளிகள் பாய், தலையணையுடன் நேற்று காலை வந்தனர். அவர்கள் தாலுகா அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

Next Story