மணல் திருடிய வாலிபர் கைது


மணல் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 10 Feb 2021 7:24 PM GMT (Updated: 10 Feb 2021 7:24 PM GMT)

மணல் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

குளித்தலை
குளித்தலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் குளித்தலை பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவிரி ஆற்றில் இருந்து மணலை மூட்டையாக கட்டி கொண்டு மோட்டார் சைக்கிளில் கடத்திச்சென்ற குளித்தலை நாப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (வயது 27) என்பவரை பிடித்து விசாரித்ததில் அவர் மணல் திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார். 
பின்னர் அவரிடமிருந்த 5 மணல் மூட்டைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த மணல் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சதீஷ், நாப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கணேசன், வஜ்ரவேலு ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, சதீஷை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.

Next Story