இளம்பெண்ணை பலாத்காரம் செய்தவர் சிறையில் அடைப்பு


இளம்பெண்ணை பலாத்காரம் செய்தவர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 11 Feb 2021 7:36 PM GMT (Updated: 11 Feb 2021 9:04 PM GMT)

புதுவை அருகே திருமணம் செய்துகொள்வதாக ஆசைகாட்டி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.

புதுச்சேரி

புதுவை முத்திரையர்பாளையம் காந்தி வீதியை சேர்ந்தவர் அல்போன்ஸ் (வயது 25). இவரும், புதுவையை அடுத்த தமிழக பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் இருவருக்கும் இடையே காதலாக மாறியது. 

இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி அந்த பெண்ணை அல்போன்ஸ் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர் கடந்த சில மாதங்களாக அந்த பெண்ணிடம் செல்போனில் பேசுவதை அல்போன்ஸ் தவிர்த்து வந்தார்.

அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதை அறிந்த அந்த பெண், தன்னைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கெஞ்சினார். ஆனால் திருமணம் செய்ய முடியாது என்று அல்போன்ஸ் மறுத்துவிட்டார்.

இதனால் ஏமாற்றம் அடைந்த இளம்பெண், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து கோட்டக்குப்பம் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, அல்போன் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைந்தனர்.

Next Story