தூக்கில் பிணமாக தொங்கிய பள்ளி மாணவி


தூக்கில் பிணமாக தொங்கிய பள்ளி மாணவி
x
தினத்தந்தி 19 Feb 2021 6:00 PM GMT (Updated: 19 Feb 2021 6:00 PM GMT)

தேவகோட்டை பகுதியில் பள்ளி மாணவி தூக்கில் பிணமாக தொங்கினார். போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

தேவகோட்டை,

தேவகோட்டை அண்ணாசாலை பகுதியில் 15 வயது மாணவி பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று காலை அவளது தாயார் வெளியூர் சென்றுவிட்டார். மாலை மாணவியின் தம்பி பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு திரும்பி உள்ளான். வீட்டிற்கு உள்ளே அந்த மாணவி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். அவரது சாவுக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து தேவகோட்டை நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story