வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு


வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
x
தினத்தந்தி 19 Feb 2021 8:30 PM GMT (Updated: 19 Feb 2021 8:30 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்:
கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் போலீசார் அத்துமீறி நுழைந்து வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்தி, வக்கீல்களின் அலுவலகம் மற்றும் வாகனங்களை சேதப்படுத்தினர். இதனை கண்டித்து அந்த தினத்தை ஆண்டுதோறும் வக்கீல்கள் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு நேற்று வக்கீல்கள் கருப்பு தினமாக அனுசரித்து, பெரம்பலூர், வேப்பந்தட்டையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பெரம்பலூர் வக்கீல்கள் சங்கத்தின் (பார் அசோசியேசன்) தலைவர் வள்ளுவன் நம்பி தலைமையிலான வக்கீல்களும், பெரம்பலூர் அட்வகேட்ஸ் அசோசியேசன் சங்கத்தின் தலைவர் திருநாவுக்கரசு தலைமையிலான வக்கீல்களும் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டன.

Next Story