புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை


புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை
x
தினத்தந்தி 20 Feb 2021 7:19 PM GMT (Updated: 20 Feb 2021 7:19 PM GMT)

பெரம்பலூரில் ஒருவரும் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்றும் புதிதாக யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. அரியலூர் மாவட்டத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து வசிப்பவர்களில் 2 பேர் நேற்று கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அரியலூர் மாவட்டத்தில் தற்போது மொத்தம் 11 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 6 பேரும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் 339 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 129 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Next Story