தாரமங்கலம் அருகே கார் மோதி தொழிலாளி பலி


தாரமங்கலம் அருகே கார் மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 21 Feb 2021 12:18 AM GMT (Updated: 21 Feb 2021 12:22 AM GMT)

தாரமங்கலம் அருகே கார் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

தாரமங்கலம்,

தாரமங்கலம் அருகே உள்ள பாப்பம்பாடி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவர் அங்குள்ள ஒரு பாஸ்ட்புட் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவருடன் வேலை பார்க்கும், ஜெயந்தவர்மன் என்பவருடன், மோட்டார் சைக்கிளில் மடத்தூரில் இருந்து பாப்பம்பாடிக்கு வந்து கொண்டிருந்தார். 

அப்போது பனஞ்சாரி என்ற இடத்தில் வந்த போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். ஜெயந்தவர்மன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். 

இது குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story