கடலூரில் மழைநீரில் மூழ்கி மூதாட்டி பலி


கடலூரில் மழைநீரில் மூழ்கி மூதாட்டி பலி
x
தினத்தந்தி 21 Feb 2021 5:09 PM GMT (Updated: 21 Feb 2021 5:09 PM GMT)

கடலூரில் மழைநீரில் மூழ்கி மூதாட்டி பலியானார்.

கடலூர்:

கடலூர் கோண்டூர் காலனி சின்னதெருவை சேர்ந்தவர் நாகப்பன். இவருடைய மனைவி தனம் (வயது 70). இவர்களுக்கு 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் தனி வீட்டில் வசித்து வந்த தனம் கை, கால்கள் செயலிழந்து காணப்பட்டார். அவருக்கு பக்கத்தில் வசிக்கும் மூத்த மகனின் மகன் தினந்தோறும் சாப்பாடு கொடுத்து வந்ததாக தெரிகிறது.

அதேபோல் நேற்று காலை, அவரது பேரன் சாப்பாடு கொடுக்க வந்தார். அப்போது கட்டிலில் படுத்திருந்த தனம் தவறி கீழே விழுந்து கிடந்தார். தொடர் மழையால் அவரது வீட்டுக்குள் தண்ணீர் அதிக அளவில் தேங்கி நின்றது. அந்த மழைநீரில் மூழ்கிய நிலையில் அவர் கிடந்தார்.

சாவு

இதையடுத்து அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தனத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி அவரது மகன் முத்து கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story