மதுரையில் நேற்று புதிதாக 7 பேருக்கு கொரோனா


மதுரையில் நேற்று புதிதாக 7 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 21 Feb 2021 6:48 PM GMT (Updated: 21 Feb 2021 6:48 PM GMT)

மதுரையில் நேற்று புதிதாக 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது

மதுரை
மதுரையில் நேற்று புதிதாக 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 5 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 193 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் மதுரையில் நேற்று 8 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 7 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 669 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 64 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். மதுரையில் இதுவரை 460 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார்கள்.

Next Story