சேலத்தில் பெண் தற்கொலை


சேலத்தில் பெண் தற்கொலை
x
தினத்தந்தி 22 Feb 2021 1:35 AM GMT (Updated: 22 Feb 2021 1:35 AM GMT)

சேலம் கருங்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 60). இவருடைய மனைவி விஜயா (50). சம்பவத்தன்று விஜயா அளவுக்கு அதிகமாக மாத்திரையை தின்று மயங்கி கிடந்தார்.

 இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த செவ்வாய்பேட்டை போலீசார் அங்கு சென்று விஜயா உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் விஜயாவின் மகள் வாலிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் இதனால் மன உளைச்சலில் இருந்த விஜயா தூக்க மாத்திரையை தின்று தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story