கிருஷ்ணகிரி, ஓசூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரி, ஓசூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Feb 2021 5:32 PM GMT (Updated: 22 Feb 2021 5:32 PM GMT)

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து கிருஷ்ணகிரி, ஓசூரில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி:
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து கிருஷ்ணகிரி, ஓசூரில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், மாநில மகளிர் அணி தலைவர் காஞ்சனா கமலநாதன், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணைத்தலைவர் மதியழகன், துணை செயலாளர் டேம் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப் வரவேற்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராசு, கோவிந்தசாமி, கோவிந்தன், சுப்பிரமணி, பேரூர் செயலாளர் ஜே.கே.எஸ்.பாபு, அணிகளின் நிர்வாகிகள் பரிதா நவாப், டாக்டர் மாலதி, டாக்டர் கந்தசாமி, ரஜினிசெல்வம், அமீன், அஸ்லம், மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓசூர்
இதேபோல் ஓசூரில் தி.மு.க. சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தளி ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., வேப்பனப்பள்ளி முருகன் எம்.எல்.ஏ., ஓசூர் மாநகர செயலாளர் சத்யா எம்.எல்.ஏ. ஆகியோர் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பேசினர்.
இதில், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன், ஓசூர் மாநகர துணை செயலாளர் திம்மராஜ், பொருளாளர் சென்னீரப்பா, தொழில் அதிபர் ஆனந்தய்யா, முன்னாள் நகர்மன்ற தலைவர் மாதேஸ்வரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், மாவட்ட துணை செயலாளர் தனலட்சுமி நன்றி கூறினார்.

Next Story