தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
x

அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி:
அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்திருப்பு போராட்டம்
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில்  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் கவிதா தலைமை தாங்கினார்.  நிர்வாகிகள் தெய்வானை, ராஜம்பாள், சுமதி, முருகம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாநில நிர்வாகிகள் நாகராஜன், கலாவதி, அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் லில்லி புஷ்பம், ஈஸ்வரி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இதில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
கோஷங்கள்
அனைத்து அங்கன்வாடி ஊழியர்களுக்கும் ஓய்வுக்குப் பின் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது பணி கொடையாக அங்கன்வாடி ஊழியர்களுக்கு தலா ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்த ஊழியர்களுக்கு உள்ளூர் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். 
3 ஆண்டுகள் பணி முடித்த மினி அங்கன்வாடி மைய ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். 1992-ம் ஆண்டு அங்கன்வாடி ஊழியர்களாக பணியில் சேர்ந்து பதவி உயர்வு பட்டியலில் விடுபட்ட ஊழியர்களை இறுதி பட்டியலில் சேர்த்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story