தர்மபுரி, காரிமங்கலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


தர்மபுரி, காரிமங்கலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Feb 2021 5:43 PM GMT (Updated: 22 Feb 2021 5:43 PM GMT)

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து தர்மபுரி, காரிமங்கலத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி:
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து தர்மபுரி, காரிமங்கலத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன், மாநில தீர்மான குழு உறுப்பினர் கீரை விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் நாட்டான் மாது, தங்கமணி, சந்திரமோகன், ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தை தடுக்க பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனே மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். ஏழை மக்களை அதிகம் பாதிக்கும் சமையல் கியாஸ் விலை உயர்வை உடனே மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் சந்திரமோகன், சக்திவேல், ராஜா, பொன் மகேஸ்வரன், முத்துலட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் டாக்டர் பிரபு ராஜசேகர், சித்தார்த்தன், செங்கண்ணன், பெரியசாமி, சவுந்தரராஜன், நெப்போலியன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தர்மபுரி நகர பொறுப்பாளர் அன்பழகன் நன்றி கூறினார்.
காரிமங்கலம்
தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து காரிமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு  நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் இன்பசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், வக்கீல் கோபால், அன்பழகன், குட்டி, ஏரியூர் செல்வராஜ், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணி, வக்கீல் மணி, மாதையன், மாதேஷ், காளியப்பன், ராஜகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் முரளி, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட அமைப்பாளர் வக்கீல் முருகன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், நகர செயலாளர்கள் சீனிவாசன், வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் வானவில் சண்முகம், விவசாய அணி துணை அமைப்பாளர் மாரியப்பன், இலக்கிய அணி செயலாளர் மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி சங்கர், கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிழக்கு ஒன்றிய செயலாளர் குமரவேல் நன்றி கூறினார்.

Next Story