நெல்லை அருகே தி.மு.க. நிர்வாகி கொலையில் ஒருவர் கைது


நெல்லை அருகே தி.மு.க. நிர்வாகி கொலையில் ஒருவர் கைது
x
தினத்தந்தி 22 Feb 2021 8:54 PM GMT (Updated: 22 Feb 2021 8:54 PM GMT)

நெல்லை அருகே தி.மு.க. நிர்வாகி கொலையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

முக்கூடல்:

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 38). இவர் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளராக இருந்து வந்தார். இவர் கடந்த 18-ந்தேதி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முக்கூடல் போலீசார், 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story