வடசென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் பதவி ஏற்பு


வடசென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் பதவி ஏற்பு
x
தினத்தந்தி 23 Feb 2021 1:54 PM GMT (Updated: 23 Feb 2021 1:54 PM GMT)

வடசென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் பதவி ஏற்பு.

சென்னை, 

சென்னையில் கூடுதல் போலீஸ் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் புதிதாக நியமிக்கப்பட்டனர். புதிதாக நியமிக்கப்பட்ட சென்னை தெற்கு சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனர் டாக்டர் கண்ணன், போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் பவானீஸ்வரி, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் வித்தியா ஜெயந்த் குல்கர்னி ஆகியோர் ஏற்கனவே பதவி ஏற்றுக்கொண்டனர்.

சென்னை கிழக்கு சட்டம்-ஒழுங்கு இணை கமிஷனர் பாலகிருஷ்ணன், தெற்கு இணை கமிஷனர் லட்சுமி, மேற்கு இணை கமிஷனர் ராஜேஸ்வரி, வடக்கு இணை கமிஷனர் துரைக்குமார் மற்றும் சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் செந்தில்குமாரி ஆகியோரும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில் வடசென்னை சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் நேற்று பதவி ஏற்றார். சேலம் போலீஸ் கமிஷனராக பணியாற்றிய அவர் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

Next Story