சத்துணவு ஊழியர்கள் ‘கருப்பு பேட்ஜ்’ அணிந்து சாலை மறியல்


சத்துணவு ஊழியர்கள் ‘கருப்பு பேட்ஜ்’ அணிந்து சாலை மறியல்
x
தினத்தந்தி 23 Feb 2021 3:50 PM GMT (Updated: 23 Feb 2021 3:50 PM GMT)

காலமுறை ஊதியம் வழங்கக்கோரி நாகையில், சத்துணவு ஊழியர்கள் ‘கருப்பு பேட்ஜ்’ அணிந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 202 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்:
காலமுறை ஊதியம் வழங்கக்கோரி நாகையில், சத்துணவு ஊழியர்கள் ‘கருப்பு பேட்ஜ்’ அணிந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 202 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாலை மறியல்
நாகை புதிய பஸ்நிலையம் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ‘கருப்பு பேட்ஜ்’ அணிந்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தேன்மொழி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ராஜூ ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், வட்ட செயலாளர் தமிழ்வாணன், ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணசாமி ஆகியோர் பேசினர். சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக் குழுவில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், குடும்பப் பாதுகாப்புடன் கூடிய குடும்ப ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். 
202 பேர் கைது
அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும், காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட 202 பேரை கைது செய்து நாகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Next Story