தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 23 Feb 2021 6:19 PM GMT (Updated: 23 Feb 2021 6:19 PM GMT)

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

கரூர்
கரூர் அருகே உள்ள புலியூர் கணேசபுரத்தை சேர்ந்தவர் குரு (வயது 46). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கடந்த 5 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட குரு நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கில் தொங்கினார். இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் குருவை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குருவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், பசுபதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story