கல்லூரி மாணவர்களுக்கு 2 ஜி.பி. டேட்டா


கல்லூரி மாணவர்களுக்கு 2 ஜி.பி. டேட்டா
x
தினத்தந்தி 23 Feb 2021 6:48 PM GMT (Updated: 24 Feb 2021 11:05 AM GMT)

கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவர்களுக்கு 2 ஜி.பி. டேட்டாவை கலெக்டர் கிரண்குராலா வழங்கினார்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழக அரசின் சார்பில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு 2 ஜி.பி.  டேட்டா கார்டு வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கிரண்குராலா தலைமை தாங்கி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள், அரசு மற்றும் சுயநிதி பாலிடெக்னிக்கல்லூரிகளை சேர்ந்த மொத்தம் 3,465 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா 2 ஜி.பி. டேட்டா கார்டை வழங்கினார்.  விழாவில் சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பெருமாள், ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சண்முகம், ஏ.கே.டி.பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கபிலர், முருகா பாலிடெக்னிக் கல்லூரி கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 


Next Story