அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Feb 2021 7:19 PM GMT (Updated: 23 Feb 2021 7:19 PM GMT)

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்
சென்னை காவல்துறை அரசு ஊழியர்கள் மீது நடத்திய தடியடி தாக்குதலை கண்டித்தும், நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் நேற்று மாலை கரூர் தாலுகா அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் சக்திவேல், பொருளாளர் பொன்.ஜெயராம், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Next Story