பாவூர்சத்திரம் அருகே மயங்கி விழுந்த பெண் சாவு


பாவூர்சத்திரம் அருகே மயங்கி விழுந்த பெண் சாவு
x
தினத்தந்தி 24 Feb 2021 12:34 AM GMT (Updated: 24 Feb 2021 12:34 AM GMT)

பாவூர்சத்திரம் அருகே மயங்கி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவநாடானூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் செல்லையா மனைவி அருள்சீனி (வயது 53). இருவரும் கூலித்தொழில் செய்து வந்தனர். கடந்த 20-ந் தேதி அருள்சீனி வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை உறவினர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருள்சீனி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story