கடவூர் ஒன்றியம் மஞ்சாநாயக்கன்பட்டி ஊராட்சி மதுக்கரை பேருந்து நிறுத்தத்தில் இருந்து வடக்கே பாலப்பட்டி, தேவச்சிகவுண்டனூர், பொரணி பொம்மணத்துப்பட்டி ஆகியஊர்களுக்கு தார்ச்சாலை செல்கிறது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட இந்த தார்ச்சாலை மதுக்கரை பேருந்து நிறுத்தத்தில் இருந்து பாலப்பட்டி வரை சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறிப்போனது. இதனால் இந்த சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு இந்த தார் சாலையை சீரமைத்து, தரமான தார் சாலையாக மாற்றி தர வேண்டுமென அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆத்தூர் தொகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது அ.தி.மு.க., தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. பா.ம.க. நிர்வாகியை கத்தியால் குத்தியதாக கூறப்பட்டதால் அடுத்தடுத்து சாலை மறியல் நடந்தது.
கிருஷ்ணகிரியில் டயரில் பெட்ரோல் ஊற்றி மர்ம நபர்கள் பெரியார் சிலைக்கு தீ வைத்து சென்றனர். இதை கண்டித்து பொதுமக்கள், அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.