ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Feb 2021 8:28 PM GMT (Updated: 24 Feb 2021 8:28 PM GMT)

ஆர்ப்பாட்டம்

ராஜபாளையம், 
ராஜபாளையத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய அரசின் பொது துறை காப்பீட்டு நிறுவன ஊழியர்களின் கூட்டு போராட்டக்குழுவினர் 2 மணி நேரம் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை கை விட வேண்டும். 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை தொடங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களை இணைக்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story