லாரி மோதி மூதாட்டி சாவு


லாரி மோதி மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 24 Feb 2021 9:57 PM GMT (Updated: 24 Feb 2021 9:57 PM GMT)

செங்கோட்டை அருகே லாரி மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

செங்கோட்டை, பிப்:

செங்கோட்டை அருகே உள்ள கேசவபுரம் மேலபிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதிமூலவேளாளர் மனைவி ஆவுடையம்மாள் (வயது 85). இவர் பக்கத்து தெருவில் இருக்கும் தனது மகள் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது, கேசவபுரம் தெற்கு மேடு செல்லும் பாதையில் வந்த லாரி ஆவுடையம்மாள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆவுடையம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த புளியரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரியை ஓட்டிவந்த கேரள மாநிலம் தென்மலை பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ஆகாத் (26) என்பவரை கைது செய்தனர். 

Next Story