மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியது


மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியது
x
தினத்தந்தி 25 Feb 2021 6:45 PM GMT (Updated: 25 Feb 2021 6:45 PM GMT)

மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியது

வேலாயுதம்பாளையம்
மண்மங்கலம் காந்தி நகர் காதப்பாறை பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 45). இவர் தனது மகளை சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று விட்டார். பின்னர் அதே மோட்டார் சைக்கிளில் கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். ஆசாரிபட்டறை என்ற இடத்தில், வந்தபோது எதிரே வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வடிவேல் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story