அங்கன்வாடி பணியாளர்களின் தொடர் காத்திருப்பு போராட்டம்


அங்கன்வாடி பணியாளர்களின் தொடர் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 25 Feb 2021 8:20 PM GMT (Updated: 25 Feb 2021 8:20 PM GMT)

அங்கன்வாடி பணியாளர்களின் தொடர் காத்திருப்பு போராட்டம்

விருதுநகர்
அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும். அவர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய முறையான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணிக்கொடையாக பணியாளர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 400 பேர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இப்போராட்டம் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடரும் என பணியாளர் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story