நெல்லையில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு


நெல்லையில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 25 Feb 2021 8:54 PM GMT (Updated: 25 Feb 2021 8:54 PM GMT)

நெல்லையில் நேற்று 10 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் 10 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பாளையங்கோட்டையை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பாளையங்கோட்டையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒரே நாளில் 4 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

இதனால் நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை 15 ஆயிரத்து 723ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 15 ஆயிரத்து 452பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 57 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 214 பேர் இறந்துள்ளனர்.

Next Story