மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2021 7:10 PM GMT (Updated: 26 Feb 2021 7:10 PM GMT)

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

லாலாபேட்டை
மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், மிகவும் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். தனியார் நிறுவன வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இட ஒதுக்கீட்டை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லாலாபேட்டை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவி கண்ணகி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். இதுகுறித்து அறிந்த கிருஷ்ணராயபுரம் மண்டல தாசில்தார் பிரபாகரன் நேரில் வந்து மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story