இருசக்கர வாகனம் மோதி பெண் பலி


இருசக்கர வாகனம் மோதி பெண் பலி
x
தினத்தந்தி 26 Feb 2021 7:35 PM GMT (Updated: 26 Feb 2021 7:35 PM GMT)

இருசக்கர வாகனம் மோதி பெண் பலி

சாத்தூர், 
சாத்தூர் அருகே கண்மாய்சூரங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது51). இவரது மனைவி தேவகி (49). இவர் கடைக்கு சென்றுவிட்டு கண்மாய் சூரங்குடியில் இருந்து ஏழாயிரம்பண்ணை செல்லும் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது   அதேரோட்டில் மேலப்புதூரை சேர்ந்த செல்வராஜ் மகன் மணிகண்டன் (26) என்பவர் வந்த இருசக்கர வாகனம்  தேவகி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தேவகி சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சாத்தூர் தாலுகா போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.

Related Tags :
Next Story