வைக்கோல் படப்பில் தீ


வைக்கோல் படப்பில் தீ
x
தினத்தந்தி 27 Feb 2021 3:38 PM GMT (Updated: 27 Feb 2021 3:38 PM GMT)

வைக்கோல் படப்பில் தீ


கூடலூர்:

கூடலூர் 4-வது வார்டு முனுசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 50). விவசாயி. 

இவர் தனது வீட்டின் அருகே  வைக்கோல் படப்பு வைத்திருந்தார். நேற்று மாலை இந்த வைக்கோல் படப்பு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து கம்பம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து கூடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story