திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 700-ஐ நெருங்குகிறது


திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 700-ஐ நெருங்குகிறது
x
தினத்தந்தி 27 Feb 2021 4:57 PM GMT (Updated: 27 Feb 2021 4:57 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 37 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுவரையில் மாவட்டம் முழுவதும் 44 ஆயிரத்து 163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 43 ஆயிரத்து 310 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

155 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 698 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர்.

Next Story