நகை, பணம் திருட்டு


நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 27 Feb 2021 10:32 PM IST (Updated: 27 Feb 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

வீட்டின் கதவை உடைத்து நகை,பணம் திருடப்பட்டு உள்ளது

மதுரை, 
மதுரை செல்லூர் 50 அடி ரோடு அகிம்சாபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டார். திரும்பி வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் செல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பீரோவில் வைத்திருந்த பொருட்கள் எல்லாம் வெளியே சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த சுமார் 11 கிராம் தங்கச்சங்கிலி, செல்போன் மற்றும் 1,500 ரூபாய் திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story