மின்சாரம் பாய்ந்து பெண் பலி


மின்சாரம் பாய்ந்து பெண் பலி
x
தினத்தந்தி 27 Feb 2021 7:17 PM GMT (Updated: 27 Feb 2021 7:17 PM GMT)

மின்சாரம் பாய்ந்து பெண் பலியானார்

கரூர்
கரூர் காந்திகிராமம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சடையப்பன். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 55). இவர் நேற்று முன்தினம் குளிப்பதற்காக எலக்ட்ரிக் ஹீட்டர் மூலம் தண்ணீர் காய வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து முத்துலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோனிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, முத்துலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story