மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
x
தினத்தந்தி 28 Feb 2021 6:04 PM GMT (Updated: 28 Feb 2021 6:04 PM GMT)

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

கந்தர்வகோட்டை:
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தை சேர்ந்தவர் கருணாகரன். இவரது மகன் ஸ்டாலின் (வயது 29). நெடுவாக்கோட்டை சண்முகசுந்தரம் மகன் அருண் (25). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அடுத்துள்ள துவார் கிராமத்திற்கு தனது நண்பனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தனர். பின்னர் நிகழ்ச்சி முடிந்து அவர்கள் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். கொல்லம் பட்டி கிராமத்தின் அருகில் வந்த போது, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஸ்டாலின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயடைந்த அருணை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஸ்டாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story