காட்டுப்புத்தூர் அருகே பாம்பு கடித்து பெண் பலி


காட்டுப்புத்தூர் அருகே பாம்பு கடித்து பெண் பலி
x
தினத்தந்தி 28 Feb 2021 9:53 PM GMT (Updated: 28 Feb 2021 9:53 PM GMT)

காட்டுப்புத்தூர் அருகே பாம்பு கடித்து பெண் பலியானார்.

காட்டுப்புத்தூர்,
காட்டுப்புத்தூர் அடுத்த காடுவெட்டி கீழ வழிக்காடு தெருவை சேர்ந்தவர் மாரியாயி (வயது 43). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. தனது தம்பி சுரேஷ் வீட்டில் வசித்து வந்த இவரை நேற்று முன்தினம் இரவு பாம்பு கடித்துவிட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story