ஓமலூர் அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது


ஓமலூர் அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
x
தினத்தந்தி 28 Feb 2021 10:38 PM GMT (Updated: 28 Feb 2021 10:38 PM GMT)

ஓமலூர் அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

ஓமலூர்:
ஓமலூர் அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
12 வயது சிறுமி
ஓமலூரை அடுத்த தின்னப்பட்டி கோட்டமேடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 47). கல் உடைக்கும் தொழிலாளி. இவர் 7-ம் வகுப்பு படித்து வரும் 12 வயது சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்து சென்று உள்ளார். 
பின்னர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதுபற்றி அந்த சிறுமியின் தாயார் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார்.
கைது
இந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் முருகேசன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.


Next Story