ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு


ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 2 March 2021 6:56 PM GMT (Updated: 2 March 2021 6:56 PM GMT)

ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு

குளித்தலை
திருச்சி மாவட்டம். முசிறி சாராயகாரத் தெருவை சேர்ந்தவர் பரமசிவம் என்பவரது மனைவி பூரணி என்கிற சம்பூரணம் (வயது 56). பரமசிவம் ஏற்கனவே இறந்து விட்டார். இதனால், பூரணி குளித்தலை பகுதியில் தங்கி பெரியார் நகரில் வசிக்கும் முசிறி அருகே ஜம்புநாதபுரத்தில் உள்ள வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரியும் சுகன்யா (32) என்பவரது வீட்டில் வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் சுகன்யா தனது ஸ்கூட்டரில் பூரணியை ஏற்றிக்கொண்டு பெரியார் நகரில் இருந்து சென்று கொண்டிருந்தார். திருச்சி-கரூர் சாலையில் குளித்தலை பெரிய பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பூரணி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பூரணி உயிரிழந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
--
பெண் சாவு

Next Story