கே.என்.பாளையம் அருகே தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை


கே.என்.பாளையம் அருகே தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை
x
தினத்தந்தி 3 March 2021 8:53 PM GMT (Updated: 3 March 2021 8:53 PM GMT)

கே.என்.பாளையம் அருகே தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை செய்துகொண்டார்.

டி.என்.பாளையம்
கே.என்.பாளையம் அருகே தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை செய்துகொண்டார். 
தொழிலாளி
கே.என்.பாளையம் அருகே உள்ள கணபதி நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 65). இவருடைய மனைவி ருக்குமணி. 
பழனிச்சாமியின் தந்தை கடந்த 3 மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். தந்தைமேல் மிகுந்த பாசம் கொண்டிருந்த பழனிச்சாமி துக்கம் தாங்காமல் மனைவி ருக்குமணியிடம் நான் இறந்துவிடுவேன் என்று அடிக்கடி கூறி வந்துள்ளார். 
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை மனைவி ருக்குமணியிடம் நான் இருப்பது இன்றே கடைசி என்று சொல்லி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் வீட்டுக்கு வரவில்லை.
தூக்கில் தொங்கினார்...
 இதையடுத்து ருக்குமணியும், உறவினர்களும் பழனிச்சாமியை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார்கள். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் நேற்று காலை டி.ஜி.புதூர் தடுப்பணை அருகே ஒரு மரத்தில் தூக்குப்போட்டு பழனிச்சாமி பிணமாக தொங்கினார்.
 இதுபற்றி தகவல் கிடைத்ததும் பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டார்கள். பின்னர் பிரேத பரிசோதனைக்காக சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுகுறித்து மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story