குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது


குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 March 2021 8:13 PM GMT (Updated: 8 March 2021 8:13 PM GMT)

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

மதுரை,மார்ச்
ராமநாதபுரம் மாவட்டம் வேர்க்கோடு பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 29). தூத்துக்குடி மாவட்டம் பண்டாரபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (25). மதுரை நகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் இவர்கள் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே இவர்களின் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் குண்டர் சட்டத்தில் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

Next Story