மயிலாடுதுறையில், மயூரநாட்டியாஞ்சலி 2-ம் நாள் நிகழ்ச்சி


மயிலாடுதுறையில், மயூரநாட்டியாஞ்சலி 2-ம் நாள் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 10 March 2021 7:21 PM GMT (Updated: 10 March 2021 7:21 PM GMT)

மகா சிவராத்திரையை முன்னிட்டு மயிலாடுதுறையில் நேற்று மயூரநாட்டியாஞ்சலி 2-ம் நாள் நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்வேறு மாவட்ட கலைஞர்கள் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை:
மகா சிவராத்திரையை முன்னிட்டு மயிலாடுதுறையில் நேற்று மயூரநாட்டியாஞ்சலி 2-ம் நாள் நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்வேறு மாவட்ட கலைஞர்கள் பங்கேற்றனர்.
மயூரநாட்டியாஞ்சலி விழா 
மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் பிரசித்தி பெற்ற மயிலாடுதுறையில் நாட்டியாஞ்சலி விழா வெகுவிமரிசையாக நடைபெறும். அந்த வகையில் மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் 15-ம் ஆண்டு மயூரநாட்டியாஞ்சலி விழா மயூரநாதர் கோவிலில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பல்வேறு நாட்டிய நிகழ்ச்சிகள் 
மங்கள இசையுடன் தொடங்கிய 2-ம் நாள் மயூரநாட்டியாஞ்சலி விழாவில் மயிலாடுதுறை சண்முகா நாட்டியப்பள்ளி குழுவினர் பாரம்பரிய வழியில் சிவபக்தி என்ற நாட்டியத்தையும், சேலம் ஐஸ்வர்யா ‘உள்ளம் உருக்கும் ஐயனின் நாமம்’ என்ற நாட்டியத்தையும், வாலாஜா லாஸ்யா டான்ஸ் அகாடமி குழுவினர் ‘பக்தனின் பார்வையில் ஆனந்த தாண்டவம்’ என்ற நாட்டிய நிகழ்வையும், சேலம் ஜதீஸ்வரம் டான்ஸ் அகாடமி குழுவினர் ‘சதங்கை பாடும் ஐயனின் பாதம்’ என்ற நாட்டியத்தையும், கோவை ராஜாமணியம்மாள் கலை கூட குழுவினர் ‘கொஞ்சும் சலங்கை’ நாட்டிய நிகழ்ச்சி நடத்தினர்.

Next Story