நெல்லையில் ஓடையில் தவறி விழுந்து வியாபாரி சாவு


நெல்லையில்  ஓடையில் தவறி விழுந்து வியாபாரி சாவு
x
தினத்தந்தி 13 March 2021 7:22 PM GMT (Updated: 13 March 2021 7:22 PM GMT)

நெல்லையில் ஓடையில் தவறி விழுந்து வியாபாரி சாவு

நெல்லை:

நெல்லை டவுன் வ.உ.சி தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 57). இவர் வாகையடி முக்கில் இட்லி வியாபாரம் செய்து வந்தார். கடந்த 8-ந் தேதி அந்த பகுதியில் உள்ள ஓடைக்குள் முருகன் தவறி விழுந்தார்.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story