வாகனம் மோதி மான் பலி


வாகனம் மோதி மான் பலி
x
தினத்தந்தி 13 March 2021 8:36 PM GMT (Updated: 13 March 2021 8:36 PM GMT)

மான் பலி

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை அருகே பெரியநாயகிபுரம் விலக்கு தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் ஆண் புள்ளிமான்  இறந்து கிடப்பதாக வத்திராயிருப்பு வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வனச்சரக அலுவலர் கோவிந்தன் தலைமையில் வனப்பாதுகாப்பு அலுவலர் ஜெயச்சந்திரன், வேட்டை தடுப்பு காவலர் ராஜேந்திர பிரபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது மான் இரை தேடுவதற்காக நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது. இதையடுத்து இறந்த மானின் உடலை மீட்டு சுக்கிலநத்தம் கால்நடை மருத்துவர் சத்திய பிரபா முன்னிலையில் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது.

Next Story