பரமத்திவேலூர் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


பரமத்திவேலூர் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 14 March 2021 6:33 PM GMT (Updated: 14 March 2021 6:36 PM GMT)

பரமத்திவேலூர் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பரமத்திவேலூர், 

பரமத்திவேலூர் தாலுகா வெங்கரை அருகே உள்ள கள்ளிபாளையத்தை சேர்ந்தவர் ராதா (வயது 48). இவர் கரூர் மாவட்டம் புகளூரில் உள்ள காகித ஆலையில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வந்தார். ராதாவின் மனைவி பூங்கொடிக்கு உடல் ‌நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ராதாவின் ஒரே மகனான பரனேஷ் (17) உடுமலைப்பேட்டையில் உள்ள ‌ராணுவ‌ பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். 
இந்தநிலையில் பரனேஷ் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ராதாவிற்கும், மலர்க்கொடி (42) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால் மலர்கொடிக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு தற்போது அவர் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டாராம்.

விசாரணை

இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ராதா கள்ளிபாளையத்தில் உள்ள சுடுகாட்டுக்கு சென்று விஷம் குடித்தார். பின்னர் சேகர் என்பவருக்கு போன் மூலம் தான் விஷம் குடித்துவிட்டதாக‌ தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சேகர் மற்றும் ராதாவின் பெற்றோர் அங்கு சென்று அவரை மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் 
சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள்‌ ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story