659 புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வினியோகம்


659 புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வினியோகம்
x
தினத்தந்தி 14 March 2021 7:03 PM GMT (Updated: 14 March 2021 7:03 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்த்த 659 வாக்காளர்களுக்கு சிறப்பு முகாமில் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து வழங்கப்பட்டது என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்த்த 659 வாக்காளர்களுக்கு சிறப்பு முகாமில் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து வழங்கப்பட்டது என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

சிறப்பு முகாம்

கடந்த 2021-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தத்தின்போது வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது புகைப்பட அடையாள அட்டையினை e-EPIC செயலி மூலம் பதிவிறக்கம் செய்ய நேற்று முன்தினம், நேற்று ஆகிய 2 நாட்கள் சிறப்பு முகாம் நடந்தது.
காளையார்கோவிலில் நடைபெற்ற சிறப்பு முகாமை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டார். அங்கு புதிய வாக்காளர்கள் அடையாள அட்டை பெறுவதை பார்வையிட்டு விசாரித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு சுருக்கத்திருத்தத்தின்போது புதிய வாக்காளர்கள் படிவம்-6-ல் கொடுக்கப்பட்ட கைப்பேசி எண்ணைக் கொண்டு வரும் 13-ந்தேதி, 14-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாமில் தங்கள் எல்லைக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் தங்களது வாக்காளர் புகைப்பட அட்டையினை பதிவிறக்கம் செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

659 பேருக்கு...

 இந்த முகாமில் 2 நாட்களில் காரைக்குடி தொகுதியில் 196 இளம் வாக்காளர்களும், திருப்பத்தூர் தொகுதியில் 150 பேரும், சிவகங்கை தொகுதியில் 168 பேரும், மானாமதுரை தொகுதியில் 145 பேர் என மொத்தம் 659 பேர் புதியதாக வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்து உள்ளனர்.
 இவ்வாறு அவர் கூறினார்.

Next Story